Jun 3, 2017

தமிழ்நாட்டைப் பார்!

ஜூன் 1, 2017 அன்று தமிழ் இந்து நாளிதழில் ஆழி.செந்தில்நாதன் எழுதியுள்ள கட்டுரை. இந்தி படிக்கனும், இந்தி படிக்கனும்னு சொல்பவர்கள் இந்த செய்தியைப் படியுங்கள். செய்தி பின்வருமாறு...



உங்களில் சிலர் இந்தச் செய்தியைச் சாதாரணமாகக் கடந்துசென்றிருக்கலாம். விளையாட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பு ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சி இப்போது தமிழில் ஒரு புதிய அலைவரிசையைத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அந்த சேதி.



ஏற்கனவே டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட பல சேனல்கள் தமிழில் வெளிவந்து கொண்டிருப்பதால், இந்தச் செய்தி நமக்கு பெரிதும் ஆச்சரியமாக இருந்திருக்காது. ஆனால் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது. ‘தமிழ்நாட்டைப் பார்!’ என்கிறார்கள் அம்மாநிலத்தவர்கள்.

“தமிழ்நாடு இந்திக்கு அடிமையாகவில்லை என்பதால் அத்தனை சேனல்காரர்களும் தமிழ்நாட்டில் தமிழில் கடைவிரிக்கிறார்கள். நாம் இந்திக்கு அடிமைப்பட்டதால் நமது மொழிகளில் இதுபோன்ற சர்வதேச சேனல்கள் வருவதில்லை” இதுதான் அவர்களின் உரையாடலின் சாரம்சம். தமிழ்நாட்டுக்குத் தமிழ். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகத்துக்கு என்றால் இந்தியாம்!

இதனால்தான் இந்த மாநிலங்களில் இப்போது மொழிப் பிரச்சினை வெடிக்கிறது. இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறார்கள் சிலர்.

நன்றி: ஆழி.செந்தில்நாதன்

1 comment:

Anonymous said...

தேசதுரோகி………